Monday, May 26, 2008

வாஸ்து அறிவியலா?

வாஸ்து அறிவியல் தான் என்பவர்கள் இடி விழுந்தாலோ, நில நடுக்கத்தாலோ பாதிப்படையாத வீடுகளை கட்டித் தருவார்களா?


Saturday, May 24, 2008

ஆயுள் ரேகை...

செய்தி: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் 80 பேர் பலி, அஸ்ஸாமில் தீவிரவாதத் தாக்குதலுக்கு 11 பேர் பலி...
சிந்தனை: பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கல்... ஏப்பா இப்படி கூட்டங்கூட்டமா சாகிறவங்களுக்கு ஆயுள் ரேகை ஒரே நாளில் முடியுமோ?

உம் ராஜ்ஜியம் வருவதாக...

பக்தன்: ஜீவனுள்ள தேவனாயிருக்கும் எம் ஆண்டவரே உம் ராஜ்ஜியம் வருவதாக...
பகுத்தறிவாளன்: 2011-இல் நான் தான் ஆட்சியப் புடிப்பேன்னும் இங்கிருப்பவனே போட்டி போடுறான்.
இவரு ஆண்டவனக் கூப்பிடுறாரு ஆட்சி அமைக்க...
விநோதமான ஆளுக நிறைய இருப்பாய்ங்க போல...

Thursday, May 15, 2008

என் பாவம் எப்படி சாமி போகும்?


பாதிரி: ஏசு உன் பாவங்களைப் போக்குவதற்காக இரத்தம் சிந்தினார்.

பாமரன்: ஏசு ரத்தம் சிந்தினா என் பாவம் எப்படி சாமி போகும்? நான் உங்களுக்காக சாப்பிட முடியுமா?

பாதிரி:?..?!?!?!

மலைச்சாமி கோவிச்சுக்குமா?

செய்தி: சீனாவில் நிலநடுக்கத்தால் 8500 பேருக்கு மேல் பலி.
சிந்தனை: ஏம்ப்பா! இவ்வளவு பேரு செத்துப் போயிருக்காங்களே. இந்தப் பணக்காரக் கோயில்களெல்லாம் ஒரு தொகையைக் குடுக்கலாம்ல.. என்ன அந்த மலைச்சாமி கோவிச்சுக்குமா?

காரும் சேரும் போதுமா?


செய்தி: திருப்பதி ஏழுமலையானுக்கு ரூ. லட்சம் செலவில் தங்க சிம்மாசனம் காணிக்கை.

சிந்தனை:
போன மாதந்தான் சென்னையில் கல்யானம் பண்ணி வச்சா. அப்புறம் இன்னோவா கார் கொடுத்தான்.. இப்ப சேர்...
ஏப்பா கல்யானம் பண்ணிக்கிட்ட கடவுளுக்கு காரும் சேரும் போதுமா?
கட்டிலும் மெத்தையும் செஞ்சு குடுங்கப்பா.....!

Tuesday, May 13, 2008

அறிவுக்கும் எட்டாதது

கடவுள் எத்தகைய அறிவுக்கும் எட்டாதது...

ஏப்பா! நானும் அதைத்தானே சொல்றேன்.
அறிவுக்கு எட்டாததுன்னா அறிவுப்பூர்வமானதில்லன்னு தானே அர்த்தம்
நீ ஏமாளிகளுக்காகச் சொல்ற..
நான் ஏமாறாம இருக்கச் சொல்றேன்.

Sunday, May 11, 2008

கடவுள் சோறு போடாதா?

பக்த்ஹன்: உலகத்திற்கு போஜனம் (உணவு) அளிக்க கடவுள் மட்டும் போதும்
பகுத்தறிவாளன்: அப்ப எதுக்கு ஓடி ஓடி கோடி கோடியா சம்பாதிச்சு கோயில் உண்டியல்ல கொட்டுற?
உலகத்துக்கு சோறு போடுற கடவுளு கோயில் சாமியாருக்கு போடாதா?

என்ன வெங்காயத்தத் தெரிஞ்சுக்கப் போகுது?

மனிதனுக்கு வரும் துன்பமெல்லாம் கடவுள் தரும் சோதனை என்றால்...

எல்லாம் தெரிஞ்சது கடவுள்னு நீதான் சொல்ற...
மனுசனச் சோதனை செஞ்சு புதுசா என்ன வெங்காயத்தத் தெரிஞ்சுக்கப் போகுது உன் கடவுளு....?

அட்சய திருதியை

செய்தி: அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும்.
சிந்தனை: ஏம்ப்பா! இது உண்மையா இருந்தா இந்தியா ஏன் 17,94,700 கோடி கடன்பட்டு இருக்கணும்?

பேசாம மத்திய அரசு இந்த நாளில் தங்கம் வாங்கி ஒரே ஆண்டில் கடனை அடைத்து விடலாமே!

Saturday, May 10, 2008

எந்த நேரம்?????

செய்தி: நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டி சுகப் பிரசவத்திலும் அறுவை மேற்கொள்ள மருத்துவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.
சிந்தனை: ஏம்ப்பா! நீ குழந்தை பிறக்கிறதாச் சொல்றது எந்த நேரம்?
குழந்தை வெளிய தலைகாட்ற நேரமா?
இல்லன்னா.. முழுசா வெளிய வந்து விழுகிற நேரமா?
இல்லன்னா... தொப்புள் கொடி அறுக்கிற நேரமா?
அதுவும் இல்லாட்டி மருத்துவர் சொல்லுவாரே அந்த நேரமா?

எந்த நேரம்?????

பாரெங்கும் பரவட்டும் பகுத்தறிவு!

பாரெங்கும் பரவட்டும் பகுத்தறிவுச் சிந்தனை எனும் நோக்கில் திராவிடர் கழக இளைஞரணியினர் ஆங்காங்கே பகுத்தறிவுச் சிந்தனைப் பலகையில் எழுப்பும் அறிவார்ந்த கேள்விகள் மக்களின் சிந்தனையைத் தூண்டுவதாகவும், சுயமாக சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைகிறது.
அந்த வகையில் சென்னை கோட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் அமைத்துள்ள பகுத்தறிவுப் பலகையின் கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு!