Thursday, June 19, 2008

கடவுள் செயல்...

குழந்தை பிறப்பது கடவுள் செயல் என்றால் ஆண், பெண் உறவு எதற்காக? திருமணம் எதற்காக?

Thursday, June 12, 2008

'மின்'னாத்தா...!?

செய்தி: விழுப்புரம் அருகே கோயில் பந்தலில் மின்சாரம் தாக்கி ஆறு பேர் பலி....

சிந்தனை: பலியானோர்க்கு ஆழ்ந்த இரங்கல்...
அம்மையாக இருந்தாலும் அம்மனிடம் முறையிடலாம்...
மின்சாரத்துக்குத் தான் கடவுள் கண்டுபிடிக்கப்படவில்லையே! யாருகிட்ட முறைடுறது.....

தசாவதாரம்???

பத்து அவதாரங்களை எடுத்த விஷ்ணு ஏன் எல்லாவற்றையும் இந்தியாவிலேயே எடுத்தார்?

Monday, June 9, 2008

எல்லாவற்றையும் படைத்தது ஒரே கடவுள் தானென்றால்...!

உலகின் பிராணிகள் எல்லாவற்றையும் படைத்தது ஒரே கடவுள் தானென்றால் ஒரு பிராணிக்கு உணவாக இன்னொரு பிராணியை படைத்தது ஏன்?

4 பிள்ளைகளைப் பெற்ற ஒரு தாய் மூத்த பிள்ளையின் பசிக்கு இளைய பிள்ளையை உணவாக்குவாளா?

Monday, June 2, 2008

வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களுக்கு...

கடவுள்: வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களுக்கு நானே இளைப்பாறுதல் தருவேன்.
பகுத்தறிவாளன்: ஆமா.. போங்கப்பா! இன்டர்நேஷனல் ரெஸ்டாரெண்ட் வச்சிருக்காரு... இளைப்பாறிட்டு முடிஞ்சா டிப்சும்(Tips) குடுத்திட்டு வாங்க...

மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


செய்தி: திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவில் ராஜ கோபுரம் கும்பாபிஷேகம்.


சிந்தனை: ஏன்னா, முதல்ல அதைச் செய்யுங்கோ, நாடும் ஜனமும் சுபிட்சமா இருப்பா...

விலைவாசிப் பிரச்சினை தீர்ந்துடும், அரசியல் பிரச்சினை பஷ்பமாயிடுமோன்னோ?