அதற்கு யார் கடவுள்?
Monday, September 22, 2008
Tuesday, July 8, 2008
மணப்பெண்ணுக்கு மூல நட்சத்திரம் இருந்தா...
மணப்பெண்ணுக்கு மூல நட்சத்திரம் இருந்தா மாமனாருக்கு ஆகாதாம்...
ஏன்டா! மணமகனுக்கு இருந்தா மாமியாருக்கு ஒன்னும் ஆகாதாடான்னா... ஆகாதுன்றான். இவனுகளுக்கு பெண்கள் அவ்வளவு இளக்காரமா?
ஏன்டா! மணமகனுக்கு இருந்தா மாமியாருக்கு ஒன்னும் ஆகாதாடான்னா... ஆகாதுன்றான். இவனுகளுக்கு பெண்கள் அவ்வளவு இளக்காரமா?
அவனன்றி அணுவும் அசையாது...
அவனன்றி அணுவும் அசையாது எனில் களவு போனவுடன் கைது செய்யப்பட வேண்டியது கடவுளா? கள்வனா?
Thursday, June 19, 2008
Thursday, June 12, 2008
'மின்'னாத்தா...!?
செய்தி: விழுப்புரம் அருகே கோயில் பந்தலில் மின்சாரம் தாக்கி ஆறு பேர் பலி....
சிந்தனை: பலியானோர்க்கு ஆழ்ந்த இரங்கல்...
அம்மையாக இருந்தாலும் அம்மனிடம் முறையிடலாம்...
மின்சாரத்துக்குத் தான் கடவுள் கண்டுபிடிக்கப்படவில்லையே! யாருகிட்ட முறைடுறது.....
Monday, June 9, 2008
எல்லாவற்றையும் படைத்தது ஒரே கடவுள் தானென்றால்...!
உலகின் பிராணிகள் எல்லாவற்றையும் படைத்தது ஒரே கடவுள் தானென்றால் ஒரு பிராணிக்கு உணவாக இன்னொரு பிராணியை படைத்தது ஏன்?
4 பிள்ளைகளைப் பெற்ற ஒரு தாய் மூத்த பிள்ளையின் பசிக்கு இளைய பிள்ளையை உணவாக்குவாளா?
4 பிள்ளைகளைப் பெற்ற ஒரு தாய் மூத்த பிள்ளையின் பசிக்கு இளைய பிள்ளையை உணவாக்குவாளா?
Monday, June 2, 2008
வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களுக்கு...
கடவுள்: வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களுக்கு நானே இளைப்பாறுதல் தருவேன்.
பகுத்தறிவாளன்: ஆமா.. போங்கப்பா! இன்டர்நேஷனல் ரெஸ்டாரெண்ட் வச்சிருக்காரு... இளைப்பாறிட்டு முடிஞ்சா டிப்சும்(Tips) குடுத்திட்டு வாங்க...
மருந்தீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
Monday, May 26, 2008
Saturday, May 24, 2008
ஆயுள் ரேகை...
செய்தி: ஜெய்ப்பூர் குண்டு வெடிப்பில் 80 பேர் பலி, அஸ்ஸாமில் தீவிரவாதத் தாக்குதலுக்கு 11 பேர் பலி...
சிந்தனை: பலியானோருக்கு ஆழ்ந்த இரங்கல்... ஏப்பா இப்படி கூட்டங்கூட்டமா சாகிறவங்களுக்கு ஆயுள் ரேகை ஒரே நாளில் முடியுமோ?
உம் ராஜ்ஜியம் வருவதாக...
பக்தன்: ஜீவனுள்ள தேவனாயிருக்கும் எம் ஆண்டவரே உம் ராஜ்ஜியம் வருவதாக...
பகுத்தறிவாளன்: 2011-இல் நான் தான் ஆட்சியப் புடிப்பேன்னும் இங்கிருப்பவனே போட்டி போடுறான்.
இவரு ஆண்டவனக் கூப்பிடுறாரு ஆட்சி அமைக்க...
விநோதமான ஆளுக நிறைய இருப்பாய்ங்க போல...
பகுத்தறிவாளன்: 2011-இல் நான் தான் ஆட்சியப் புடிப்பேன்னும் இங்கிருப்பவனே போட்டி போடுறான்.
இவரு ஆண்டவனக் கூப்பிடுறாரு ஆட்சி அமைக்க...
விநோதமான ஆளுக நிறைய இருப்பாய்ங்க போல...
Thursday, May 15, 2008
என் பாவம் எப்படி சாமி போகும்?
மலைச்சாமி கோவிச்சுக்குமா?
செய்தி: சீனாவில் நிலநடுக்கத்தால் 8500 பேருக்கு மேல் பலி.
சிந்தனை: ஏம்ப்பா! இவ்வளவு பேரு செத்துப் போயிருக்காங்களே. இந்தப் பணக்காரக் கோயில்களெல்லாம் ஒரு தொகையைக் குடுக்கலாம்ல.. என்ன அந்த மலைச்சாமி கோவிச்சுக்குமா?
காரும் சேரும் போதுமா?
Tuesday, May 13, 2008
அறிவுக்கும் எட்டாதது
கடவுள் எத்தகைய அறிவுக்கும் எட்டாதது...
ஏப்பா! நானும் அதைத்தானே சொல்றேன்.
அறிவுக்கு எட்டாததுன்னா அறிவுப்பூர்வமானதில்லன்னு தானே அர்த்தம்
நீ ஏமாளிகளுக்காகச் சொல்ற..
நான் ஏமாறாம இருக்கச் சொல்றேன்.
ஏப்பா! நானும் அதைத்தானே சொல்றேன்.
அறிவுக்கு எட்டாததுன்னா அறிவுப்பூர்வமானதில்லன்னு தானே அர்த்தம்
நீ ஏமாளிகளுக்காகச் சொல்ற..
நான் ஏமாறாம இருக்கச் சொல்றேன்.
Sunday, May 11, 2008
கடவுள் சோறு போடாதா?
பக்த்ஹன்: உலகத்திற்கு போஜனம் (உணவு) அளிக்க கடவுள் மட்டும் போதும்
பகுத்தறிவாளன்: அப்ப எதுக்கு ஓடி ஓடி கோடி கோடியா சம்பாதிச்சு கோயில் உண்டியல்ல கொட்டுற?
உலகத்துக்கு சோறு போடுற கடவுளு கோயில் சாமியாருக்கு போடாதா?
பகுத்தறிவாளன்: அப்ப எதுக்கு ஓடி ஓடி கோடி கோடியா சம்பாதிச்சு கோயில் உண்டியல்ல கொட்டுற?
உலகத்துக்கு சோறு போடுற கடவுளு கோயில் சாமியாருக்கு போடாதா?
என்ன வெங்காயத்தத் தெரிஞ்சுக்கப் போகுது?
மனிதனுக்கு வரும் துன்பமெல்லாம் கடவுள் தரும் சோதனை என்றால்...
எல்லாம் தெரிஞ்சது கடவுள்னு நீதான் சொல்ற...
மனுசனச் சோதனை செஞ்சு புதுசா என்ன வெங்காயத்தத் தெரிஞ்சுக்கப் போகுது உன் கடவுளு....?
எல்லாம் தெரிஞ்சது கடவுள்னு நீதான் சொல்ற...
மனுசனச் சோதனை செஞ்சு புதுசா என்ன வெங்காயத்தத் தெரிஞ்சுக்கப் போகுது உன் கடவுளு....?
அட்சய திருதியை
செய்தி: அட்சய திருதியையில் தங்கம் வாங்கினால் செல்வம் கொழிக்கும்.
சிந்தனை: ஏம்ப்பா! இது உண்மையா இருந்தா இந்தியா ஏன் 17,94,700 கோடி கடன்பட்டு இருக்கணும்?
பேசாம மத்திய அரசு இந்த நாளில் தங்கம் வாங்கி ஒரே ஆண்டில் கடனை அடைத்து விடலாமே!
Saturday, May 10, 2008
எந்த நேரம்?????
செய்தி: நல்ல நேரத்தில் குழந்தை பிறக்க வேண்டி சுகப் பிரசவத்திலும் அறுவை மேற்கொள்ள மருத்துவர்கள் வற்புறுத்தப்படுகிறார்கள்.
சிந்தனை: ஏம்ப்பா! நீ குழந்தை பிறக்கிறதாச் சொல்றது எந்த நேரம்?
குழந்தை வெளிய தலைகாட்ற நேரமா?
இல்லன்னா.. முழுசா வெளிய வந்து விழுகிற நேரமா?
இல்லன்னா... தொப்புள் கொடி அறுக்கிற நேரமா?
அதுவும் இல்லாட்டி மருத்துவர் சொல்லுவாரே அந்த நேரமா?
எந்த நேரம்?????
பாரெங்கும் பரவட்டும் பகுத்தறிவு!
பாரெங்கும் பரவட்டும் பகுத்தறிவுச் சிந்தனை எனும் நோக்கில் திராவிடர் கழக இளைஞரணியினர் ஆங்காங்கே பகுத்தறிவுச் சிந்தனைப் பலகையில் எழுப்பும் அறிவார்ந்த கேள்விகள் மக்களின் சிந்தனையைத் தூண்டுவதாகவும், சுயமாக சிந்திக்கத் தூண்டுவதாகவும் அமைகிறது.
அந்த வகையில் சென்னை கோட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் அமைத்துள்ள பகுத்தறிவுப் பலகையின் கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு!
அந்த வகையில் சென்னை கோட்ட திராவிடர் கழக இளைஞரணியினர் அமைத்துள்ள பகுத்தறிவுப் பலகையின் கேள்விகள் உங்கள் சிந்தனைக்கு!
Subscribe to:
Posts (Atom)